நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடிப்பெண்ணே


சித்திரைப்பெண்ணே, உன்சினத்தால் வாழ்வை சீரழித்துவிடாதே

வைகாசி பெண்ணே உன்வரம்புமீறிய வார்த்தையால் வாழ்வை
வதைத்துக்கொள்ளாதே.


ஆணிபெண்ணே, உன்ஆதாரமில்லாத ஆத்திரத்தால் வாழ்வை அழித்துவிடாதே.

ஆடிப்பெண்ணே, உன்அளவுக்குமீறிய ஆட்டத்தால் வாழ்வை அஸ்தமனம்மில்லாமல் ஆக்கிக்கொள்ளாதே.

ஆவணிப்பெண்ணே, உன்ஆணவத்தால் வாழ்வை அலங்கோலம் ஆக்கிவிடாதே.

புரட்டாசிப்பெண்ணே, உன்பொல்லாதாத குணத்தால் வாழ்வை புண்ணாக்கிக்கொள்ளாதே

ஐப்பசிப்பெண்ணே, உன்ஐயத்தைமீறி அதிகாரம் செய்யாதே

கார்த்திகைப்பெண்ணே, உன்கற்புக்கு கலங்கதை கற்பித்துவிடாதே

மார்கழிப்பெண்ணே, உன்மனம்போனபோக்கில் வாழ்வை நடத்திவிடாதே

தைப்பெண்ணே, உன்தவறினால் வாழ்க்கையை தவறவிட்டுவிடாதே

மாசிப்பெண்ணே, உன்மரபுகளை மறந்துவிட்டு வாழ்ந்துவிடாதே

பங்குனிப்பெண்ணே, உன்பண்பான குணத்தால் மற்றவைகளை தவிர்ந்து
பவித்ரமானதாய் உன்வாழ்வை பளிச்சென்று ஆக்கிக்கொள்.......

[டிஸ்கி] பெண் என்ற இடத்தில் ஆணென்றும் போட்டுக்கொள்ளலாம்.
எப்படி ஒரே கல்லில்.......]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது