பக்கத்துவீட்டு வயிறு
பசிக்காமல் பசியாற
பந்தி பரத்து
பணக்காரத் திமிறு....
விதவிதமா விளைக்குது
விவசாய நிலம்
விளைக்கும்
விவசாயிக்கு மட்டும்
வஞ்சகமில்லா பஞ்சம்...
பணமிருந்தும் பாவைக்கு
பஞ்சமானதே உடல்மறைக்கும்
பட்டாடை
பணமில்லா பேதைக்கு
பஞ்சமானதே உடல்மறைக்க
சிற்றாடை...
நெய்யுது ரகரகமாய்
நெசவாளரின் தறி
நொந்துபோகுது மனசு
நெய்தவருக்கில்லையே
நூல்கழியாத் துணி...
டிஸ்கி// கிறுக்கள் என் சிந்தனையில் பட்டது.
படங்கள் கூகிளில் சுட்டது.
இப்படத்திக்கு அஹமது இர்ஷாத் எழுதியது
நேற்று காதலில் தோற்று
மனதை வைத்தோம் பூட்டி
இன்று வானில் சிறகடித்து
நிலவுக்கே போட்டி..
போட்டினதும்தானே இக்கவிதையே வந்தது. இல்லையா இர்ஷாத்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.