நன்றி கூகிள்
இரவுநேர வானம் இருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்
விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்
விழிமூடிய நீ
விருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது விண்மீன்கள்
விடிவது தெரியாமலே! -என்
விழிகள் ஒளிர்வது அறியாமலே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.