நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனமயக்கும் விடியல்


இளங் காற்று இசை மீட்ட
ஈரப் பதத்தோடு
கரும்புகையும் கார்மேகமும்
கலந்து கலையும் தருணம்

பச்சைமேல் இச்சை கொண்ட
பனித் துளிகள்
புல்வெளியெங்கும் தன்னைப்
போர்த்தியிருக்க

கதகதவென சூடு கொடுத்து
குளு குளுவென்ற குளிரை நீக்க
தகதகவென்று எழுந்தது
செவ்வகச் சூரியன் - தன்

செந்நிற வண்ணத்தை
சிவக்க விட்டபடி
சுற்றி வளைத்தது
சேவலை கூவச்சொல்லி!

அதிகாலை விடியல் பொழுதை
அழகு நிறைந்த அம்சமாய்
அடிமைப் படாத பறவையொலிகளையும்
அலராம் வைத்து எழுப்பத்தொடங்கியது

”இப்படி”

அதிகாலையிலேயே வந்து 
அனுதினமும் தன்னை
அழகுப்படுத்தி  –பிறரை
அணு அணுவாய் ரசிக்கவைத்து
அதிசயவைக்கும் விடியலே!

உன்னைக் கொண்டு நேரம் நகர
உனைத் தொடர்ந்தே பொழுதும் கரைய
மறைந்து மறைந்து மீண்டும்  தொடர்கிறதே!
மயக்கும் விந்தையாய் மங்களம் பூசிய 
அந்திமாலையும்
மகிழ்ச்சி பூக்கவைக்கும் 
அதிகாலையும்.. 

விடியலென்ற தலைப்பிற்க்கு வானலை வளர்தமிழ் ”தமிழ்தேர் மாத இதழுக்காக’” 
எழுதிய கவிதை

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது