நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

செல்லச் சீமாட்டி.

எட்டடுக்கு மாளிகையில்
பத்தடுக்கு செல்வமிருந்தாலும்
ஈடாகுமா ஈன்றெடுக்கும்
மழலைக்கு ஒப்பாக!

ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையை
எளிதில் ஏக்கம் தீர்த்து
எல்லையில்லா மகிழ்வழிக்கும்
எதுவாகினும் ஒரு குழந்தை!

மூவேளை உண்டுகளிக்க
முடியாமலிந்தாலும்
ஒற்றைப் பிள்ளையிருந்தால்
ஒருபிடி உண்டாலும் போதும்!

கோடிகள் கொட்டிக் கிடந்தும்
கொஞ்சி விளையாட
குழந்தையில்லையெனில்
கூனிக்குறுகிடந்திடும் குடும்பம் முழுவதும்!

கூழைக் குடித்தாலும்
கொஞ்சிக் கொஞ்சி கூத்தாடி
குடிசைக்குள் கொட்டிக்கிடக்கும்
கோலாகலங்கள் ஆயிரமாயிரம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

3 கருத்துகள்:

  1. கூழைக் குடித்தாலும்
    கொஞ்சிக் கொஞ்சி கூத்தாடி
    குடிசைக்குள் கொட்டிக்கிடக்கும்
    கோலாகலங்கள் ஆயிரமாயிரம்//

    அருமை கவிதையும் குழந்தையும்

    பதிலளிநீக்கு
  2. மாஷா அல்லாஹ். உங்கள் குட்டிப் பேத்திக்கு என் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது