நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தலையணையென்பது!



பஞ்சுமெத்தைக் குழந்தை! 
பதைபதைக்கும் மனதிற்க்கு
பக்கத்துணை!

கரையும் கண்ணீருக்கு
ஒத்தட ஆறுதல்!

மனக் குமுறலுக்கு
மறைமுக தேறுதல்!

தனிமையை போக்கும் தோழமை
தவிப்புகளை உள்ளடக்கும் ஆளுமை

இருதலை நான்கு கண்களை
ஒன்றிணைக்கும் சங்கமம்!

இணையில்லா நேரத்தில்
இன்னல்களையும் ஏற்கும் இலவம்!

தலையணை மந்திரம் திடமானால் 
துணைகள் இன்பத்தோனியில்!

தலையணையில் வேறுதலை மாறினால்
துணைகள் துன்பக்கேணியில்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

10 கருத்துகள்:

  1. அருமை... பல திட்டங்களை தீட்டும் இடம்...

    பதிலளிநீக்கு
  2. இருதலை நான்கு கண்களை
    ஒன்றிணைக்கும் சங்கமம்!//

    சூப்பரா இருக்கு இந்த வரிகள்

    பதிலளிநீக்கு
  3. ‘தலையணை மந்திரம் தூக்கத்தை கெடுக்கும்...
    தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும்...’ அப்படீன்னு ஒரு பாடல் வரி உண்டு...

    என்னைப் பொறுத்தளவில்...

    ‘தலையணை’ என்பது...
    அதுவும் ஒரு தாய்மடிதான்...

    தலையணையில்
    தலைவைத்து படுத்தால்
    அதன் மென்மை....

    நமது
    துன்பங்களையும்...
    துயரங்களையும்....
    மனவேதனையையும் போக்கும்
    மாமருந்தாய்... அதன் மென்மை இருக்கும்...

    எனவே...
    அதுவும் ஓர் “அஃகிறிணை” தாய்மடிதான்....

    அந்த
    தலையணை மென்மை சுகத்தை
    அனைவருமே
    அனுபவித்திருப்பவர்...
    அறிந்திருப்பர்...

    எனைப் பொருத்தளவில் அதுவும் ஓர் தாய்மடிதான்...

    பதிலளிநீக்கு
  4. ‘தலையணை மந்திரம் தூக்கத்தை கெடுக்கும்...
    தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும்...’ அப்படீன்னு ஒரு பாடல் வரி உண்டு...

    என்னைப் பொறுத்தளவில்...

    ‘தலையணை’ என்பது...
    அதுவும் ஒரு தாய்மடிதான்...

    தலையணையில்
    தலைவைத்து படுத்தால்
    அதன் மென்மை....

    நமது
    துன்பங்களையும்...
    துயரங்களையும்....
    மனவேதனையையும் போக்கும்
    மாமருந்தாய்... அதன் மென்மை இருக்கும்...

    எனவே...
    அதுவும் ஓர் “அஃகிறிணை” தாய்மடிதான்....

    அந்த
    தலையணை மென்மை சுகத்தை
    அனைவருமே
    அனுபவித்திருப்பவர்...
    அறிந்திருப்பர்...

    எனைப் பொருத்தளவில் அதுவும் ஓர் தாய்மடிதான்...

    பதிலளிநீக்கு
  5. 'தலையணை மந்திரம்' தெரியாமல் தலைவனை தன் வசமாக்கமுடியவில்லை
    'தலையணை மந்திரம்' தாய் சொல்லிக் கொடுத்தும் அறிந்தபாடில்லை
    'தலையணை மந்திரம்' தாரக மந்திரமாய் குடும்பங்களைப் பிர்த்ததுமுண்டு
    'தலையணை மந்திரம்' அறிந்தமையால் தறிகெட்டுப் போகாத நிலையுமுண்டு
    'தலையணை மந்திரம்' அறிய பாடம் நடத்த முடியுமோ!
    'தலையணை மந்திரம்' தானே அறியும் தாரக மந்திரம்

    'தலையணை மந்திரம்' தனை கவிதையாய் தர தனித் திறமை வேண்டும்
    'தலையணை மந்திரம்' தங்கத் தாரகைகள் மட்டும் அறிந்த அறிய மந்திரம்
    'தலையணை மந்திரம்' அறிந்தவர்கள் சாதனைப் பெண்கள்
    'தலையணை மந்திரம்' ஆண்களுக்கு சூடு போட்டாலும் வராது

    பதிலளிநீக்கு
  6. அன்பின் நெஞ்சங்களாய் கருத்துகளை அள்ளி பகிர்ந்தளித்திருக்கும் உள்ளங்களுக்கு, அன்புகலந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. தலையணை மந்திரம் அறிந்தவர்கள் அறியாதவர்கள் யாவருக்கும் தலையனையின் துணை தேவைப்படும்
    சிலருக்கு மந்திரமாய்
    சிலருக்கு தந்திரமாய்
    சிலருக்கு தாய்மடியாய்
    சிலருக்கு சேய்நினைவாய்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது