சிறகிருந்தும் சிறையில்
இறகு பிடுங்கபட்ட நிலையில்
எக்கி எக்கி பார்த்தும்
எட்டாக் கனியாய்
எங்கோ எங்கெங்கோ
எள்ளிநகையாடியபடி
ஏனென்று கேட்டால்
என்னடி எகத்தாளமா
இடிசொல்,,
எதற்கென்று கேட்டால்
என்னம்மா திமிர்தனமா
பழிச்சொல்,,
எனகென்று கேட்டால்
என்னடி எடுப்புதனமா
கடுஞ்சொல்,,
சுமைக் கல்லைகட்டி
சுகமாய் பறக்கசொல்லும்
சுதந்திரம்,, பலருக்கு
சுகபோக வாழ்வுகொடுத்து-மன
சுறுக்குபோட்டு நிலைகுலைக்கும்
சுதந்திரம்,, பலருக்கு
தரத்தையும் கெடுக்கும்
தரத்தையும் கொடுக்கும்
சு தந்திரம்
தந்திரமிக்கது
தரம் பார்த்தே
தங்குமிடத்தை
தேர்வு செய்கிறது...
கவிதை வயல்-- 186--
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.