மின்மினிகளென்றும்
விண்மீன்களாகப் போவதில்லை
இருந்தபோதும்
இருளைக் கீறி சிறு
வெளிச்சம் தரமாலது வீழ்வதில்லை
எட்டு நாட்களென்றபோதும்
பட்டுபூச்சி
சிறகடிக்காமல் சாவதில்லை
தன்னிறப்பில் பிறர் சிறக்க
வழிசெய்யாமல் போவதில்லை
அறிவிலொன்று குறைந்தவைகளே
ஆகாசம் தொட எண்ணுகையில்
ஆறறிவு பெற்ற நாமக்கேன்
அசதி வெல்ல முயற்சியில்லை
அலைவதிலும் திரிவதிலும்
அர்த்தமில்லை-வீணாக
பொழுதை கழிப்பதிலும்-பிறருக்கு
பொதியாய் கிடப்பதிலும் பெருமையில்லை
தெருவினைகள் ஊர்வினைகள்
மனிதருக்கு அழகில்லை
பொறாமைகள் பெருந்தீவினைகள்
வாழ்வுக்கு சிறந்ததில்லை
திருவினைகள்
ஏற்படவே முயற்சிக்கனும்
தீவிர முயற்சிகள்தான்
ஏக திருப்பங்களையும் உண்டாக்கும்
சோர்வுகொண்டு வீழ்ந்து கிடந்தால்
சுறுசுறுப்பு எங்கே யிருந்துவரும்
முடங்கிக் கொண்டே
முத்தெடுக்க ஆசைக்கொண்டால்
மூச்சல்லவோ மூர்ச்சையாகும்
முயற்சிக்க முயற்சிக்க
முட்பாதைகளும் பழகிப்போகும்
நடக்க நடக்க
நாளடைவில் முள்ளும் கல்லும்
முருங்கைப் பூவாக மாறும்...
”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.