அந்தரத்தில்
அறுந்து தொங்கும்
வார்த்தைகள்
தனிமையின்
வெறுமை சொல்கின்றன!
நாவிலிருந்து
நழுவி விழுந்து புதைந்த
வார்த்தைகள்
மனப் புழுக்கத்தின்
நெறுக்கத்தை உணர்த்துகிறன!
இதயத்தின்
உள்சென்று ஒட்டிக்கொண்ட
வார்த்தைகள்
நெஞ்சத்தின்
நேசிப்பை கூட்டுகின்றன!
நீ!
அறுந்து தொங்கும்
வார்த்தைகளா?
நழுவி விழுந்த
வார்த்தைகளா?
ஒட்டிக்கொண்ட
வார்த்தைகளா?
ஒன்றும் புரியாமல்
மெளனமுடுத்தி தவிக்கிறேன்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.